ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்

திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

174 மனுக்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 174 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ஆழ்குழாய் கிணறு அமைக்க கடனுதவி பெற்ற 9 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை, 8 பேருக்கு ரூ.26 ஆயிரத்து 274 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்கள், 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 36 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டி என ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 310 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் விஜயன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story