படகில் கடலுக்கு சென்றசிறுவன் திடீர் சாவு


படகில் கடலுக்கு சென்றசிறுவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் படகில் கடலுக்கு சென்ற சிறுவன் திடீரென மயங்கி விழுந்து இறந்து போனான்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து படகில் கடலுக்கு சென்ற சிறுவன் மயங்கி விழுந்து திடீரென இறந்தான்.

கடலுக்கு சென்ற சிறுவன்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி அருகே உள்ள சுனாமி நகரை சேர்ந்தவர் பிரின்ஸ்டன். இவருடைய மகன் ஜெரோமின் (வயது 16).

நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் சங்கு குளி தொழிலுக்காக கடலுக்கு நாட்டுப்படகில் சென்றனர். அவர்களுடன் ஜெரோமினும் சென்றான்.

சாவு

நடுக்கடலில் படகு சென்றபோது ஜெரோமின் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை மற்ற மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story