தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோதுகிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி


தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோதுகிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வீருசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 50). விவசாயி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். பின்னர் அவர் அங்கு உள்ள மோட்டாரை ஆன் செய்ய சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுமார் 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதில் கிணற்றில் உள்ள பாறையில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் வேலுச்சாமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி வேலுச்சாமி உடலை மீட்டனர். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story