அடுப்பு பற்ற வைத்தபோதுஆடையில் தீப்பிடித்து பெண் படுகாயம்


அடுப்பு பற்ற வைத்தபோதுஆடையில் தீப்பிடித்து பெண் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:45 PM GMT)

தேனி அல்லிநகரத்தில் அடுப்பு பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்ததில் பெண் படுகாயம் அடைந்தார்.

தேனி

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி பாலநாகம்மாள் (வயது 24). இவர் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது அவருடைய மகன் அவரை நோக்கி ஓடி வந்தார். மகனை பிடிப்பதற்காக அவர் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக அவருடைய ஆடையில் தீப்பற்றியது. இதில் அவருடைய உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story