நடை பயிற்சி சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம்


நடை பயிற்சி சென்றபோது  மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம்
x

போடி அருகே நடை பயிற்சி சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயமடைந்தார்

தேனி

போடி அருகே உள்ள சங்கராபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி மல்லம்மாள் (வயது 52). நேற்று மாலை இவர், சங்கராபுரத்தில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாதையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் தேனி அருகே உள்ள வருசநாட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுதேவனை கைது செய்தனர்.

1 More update

Next Story