கிணற்றை ஆழப்படுத்தும் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி


கிணற்றை ஆழப்படுத்தும் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 Aug 2023 7:00 PM GMT (Updated: 3 Aug 2023 7:01 PM GMT)

சங்கரன்கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கரிப்பிலான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் மாரியப்பன் (வயது 40), கூலி தொழிலாளி.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கல் சரிந்து விழுந்து பலி

நேற்று இந்த பணியில் மாரியப்பன் உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கல் மற்றும் மண் சரிந்து மாரியப்பன் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சின்னகோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மாரியப்பனுக்கு அன்னபூரணம் என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Next Story