நடைபயிற்சி சென்றபோது வாகனம் மோதி டிரைவர் பலி


நடைபயிற்சி சென்றபோது  வாகனம் மோதி டிரைவர் பலி
x

சின்னமனூர் அருகே நடைபயிற்சி சென்றபோது வாகனம் மோதி டிரைவர் பலியானார்.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 46). மினி லாரி டிரைவர். நேற்று காலை இவர், அழகாபுரியில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story