பரவலாக மழை


பரவலாக மழை
x

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருவையாறில் 52 மி.மீட்டர் பதிவானது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருவையாறில் 52 மி.மீட்டர் பதிவானது.

தஞ்சாவூர்

தஞ்சையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. நேற்றுமுன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மேகம் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. ஏற்கனவே வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் கருகும் நிலைக்கு சென்ற நெற்பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 52 மி.மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக திருவிடைமருதூரில் 1 மி.மீட்டர் மழை பெய்தது.

்மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

திருவையாறு-52, அதிராம்பட்டினம்-49, பட்டுக்கோட்டை-40, கல்லணை-39, ஈச்சன்விடுதி-32, திருக்காட்டுப்பள்ளி-28, தஞ்சை-26, வல்லம்-19, அய்யம்பேட்டை-18, நெய்வாசல் தென்பாதி-17, பூதலூர்-14, பேராவூரணி-12, ஒரத்தநாடு-11, அணைக்கரை-7, வெட்டிக்காடு-6, கும்பகோணம்-6, மதுக்கூர்-4, குருங்குளம்-3, திருவிடைமருதூர்-1.

நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் பரவலாக மழை பெய்தது.

பட்டுக்கோட்டை, மதுக்கூர்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நேற்று இரவு 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. 7.05 மணிக்கு தொடங்கிய மழை 8.45 மணி வரை நீடித்தது. இந்த மழை நேரடி சாகுபடி பயிர்களுக்கு ஏற்றதாகும்.

மதுக்கூரில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர்

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதிகளில் ேநற்றுமுன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இடி- மின்னல் காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கிப்பட்டி

அதேபோல் தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் செங்கிப்பட்டி கடைவீதி மற்றும் திருச்சி, தஞ்சை செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


Next Story