முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கைது


முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கைது
x

நெல்லை அருகே முதியவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கீழ ஓமநல்லூரை சேர்ந்த சாமுவேல் (வயது 63) என்பவருக்கும், அவருடைய மனைவி பாப்பா (60) என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாமுவேல் மீது பாப்பா கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் சாமுவேலுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து பாப்பாவை நேற்று கைது செய்தார்.

1 More update

Next Story