போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை


போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை

கோயம்புத்தூர்

கோவை

கோவை பாலசுந்தரம் ரோடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). இவர் கோவை மாநகர போலீசில் ஏட்டாக உள்ளார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 43) கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர், டாக்டர்கள் கொடுத்த மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று ஏட்டு பால்ராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி வாழ்க்கையில் வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திரவத்தை குடித்தார். இதனால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றுமுன்தினம் ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story