சொக்கம்பட்டி வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரிந்த காட்டுத் தீ...!


சொக்கம்பட்டி வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரிந்த காட்டுத் தீ...!
x

சொக்கம்பட்டி வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்து உள்ளனர்.

தென்காசி


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி பீட் மலையில் 2 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்தது வருகின்றது. கடந்த மாதம் கோடை வெயிலால் கருகி கிடந்த இலைகளில் பற்றிய காட்டுத்தீ, மளமளவென பரவி எரிய தொடங்கி உள்ளது.

இந்த தீயை அணைக்கும் பணியில் கடையநல்லூர் வனத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 2 நாட்களாக போராடி வந்தனர்.

இந்த நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள், தனியார் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் செடிகொடிகளை கொண்டு வனத்துறையினர் தீயை அணைத்து உள்ளனர் என்று கூறப்படுகின்றது.


Next Story