சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x

திருமருகல் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

3 கிலோ மீட்டர் தூர சாலை

திருமருகல் ஒன்றியம் வீச்சூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிடாமங்கலம் பாலம் முதல் குரும்பூர், வீச்சூர், மருதாவூர், சித்தாம்பூர் சாலை வழியே நன்னிலம் ஒன்றியத்தை இணைக்கும் சாலை உள்ளது.

இந்த சாலை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக கணபதிபுரம் வந்து அங்கிருந்து பூந்தோட்டம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருநள்ளாறு, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

10 ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது

இந்த நிலையில் வீச்சூர் செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story