மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுபாட்டில்கள் பறிமுதல்
x

திருத்துறைப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவாரூர்

கோட்டூர்;

திருத்துறைப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மதுபாட்டில்கள் கடத்தல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரூபா தேவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் காரில் 40 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தன.இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (வயது62) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் வெளிமாநில மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைது

இதைப்போல திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கீழத்தெருவை சேர்ந்த மதியழகன் (55) தனது வீட்டில் மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story