மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோமேஸ்வரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் (வயது63) சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதைப்போல திருவைகாவூர் ஊராட்சி எடக்குடி புது தெருவில் வசிக்கும் ராகவன் ( 60) தன் வீட்டு வாசலில் மது விற்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story