காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகள் மூடல் கலெக்டர் அறிவிப்பு


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  நாளை மதுக்கடைகள் மூடல்  கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகள் மூடல் கலெக்டர் அறிவிப்பு

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மது விற்பனை செய்ய உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம் ஆகியவை அனைத்தும் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story