தர்மபுரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டுநாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல்


தர்மபுரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டுநாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story