போடி அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்


போடி அருகே அனுமதியின்றி  மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்
x

போடி அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

தேனி

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி உள்ளது. இங்கு ஒன்னம்மாள் தொட்டராயர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று நின்றது. இந்நிலையில் இன்று அந்்த மரத்தை சிலர் வெட்டி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாசில்தார் செந்தில் முருகன் தலைமையில் அதிகாரிகள், போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது மரத்தை வெட்டி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகள் வருவதை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி மரத்தை வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீார் வழக்குப்பதிவு செய்து மரத்தை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story