கஞ்சா விற்ற பெண் கைது

வந்தவாசி அருகே கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மழையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மழையூர் பழைய காலனியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் ஒரு பெண் கஞ்சா விற்று இருப்பதை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரின் மனைவி சிந்து (வயது 21) என்பது தெரியவந்தது.
சிந்துவிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





