வடை வியாபாரியிடம் பணம் திருடிய பெண் கைது


வடை வியாபாரியிடம் பணம் திருடிய பெண் கைது
x

திசையன்விளையில் வடை வியாபாரியிடம் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை லூர்துமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 65). இவர் திசையன்விளை பஸ்நிலையத்தில் வடை வியாபாரம் செய்து வருகிறார். திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி பட்டுராசாத்தி (35). வள்ளியூர் மடப்புரத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.32,500-ஐ எடுத்து கொண்டுவந்து பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தபோது யாரோ மார்மநபர் திருடி சென்றுவிட்டதாக திசையன்விளை போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வடை வியாபாரி சந்திரா மணிபர்சில் வைத்து இருந்த ரூ.7ஆயிரம் மணிப்பர்சுடன் காணாமல் போனது. சந்திரா மாத்திரை போட்டு கண் அசந்த நேரத்தில் அவரிடம் நீண்ட நேரம் பேசிகொண்டிருந்த திசையன்விளை நவ்வலடி ரோடு ரவி மனைவி முத்துலட்சுமி (39) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பட்டுராசாத்தியிடம் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.


Related Tags :
Next Story