பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


பரமத்திவேலூர் அருகே  காவிரி ஆற்றில் பெண் பிணம்  யார் அவர்? போலீசார் விசாரணை
x

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே கொந்தளம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.கே.மேட்டூர் கன்னிமார் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ‌‌‌‌50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் ஒன்று மிதப்பதாக‌ அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த பெண் கழுத்தில் கருப்பு, வெள்ளை கலரில் பாசிமணியும், கையில் சிவப்பு நிறத்தில்‌ கயிறு அணிந்திருந்தார். மேலும் இறந்த பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story