தீயில் கருகி பெண் சாவு


தீயில் கருகி பெண் சாவு
x
தினத்தந்தி 30 Jun 2023 7:54 PM GMT (Updated: 1 July 2023 12:17 PM GMT)

சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் பரிதாபமாக இறந்தார்.

திருச்சி

சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி ரோஜா (வயது26). சம்பவத்தன்று இவர் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்றவைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.

இதைத்தொடர்ந்து தீ அவரது உடலிலும் பற்றிக்கொண்டது. வேதனையால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story