விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா வள்ளுவாகை அருகில் உள்ள தெள்ளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி திலகவதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

திலகவதி கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 2-ந் தேதி விஷம் (எலி மருந்து) குடித்து மயங்கி கிடந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story