விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே மேலநாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பெர்க்மான்ஸ். இவரது மனைவி அடைக்கலமேரி (வயது 50). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்து மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அடைக்கலமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story