விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Sep 2022 7:00 PM GMT (Updated: 19 Sep 2022 7:00 PM GMT)

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள குருந்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி சந்திரா (வயது 47). கருப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். சந்திரா தனது மகன் முத்துப்பாண்டியுடன் (28) வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சந்திராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த சந்திரா, கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story