விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Nov 2022 7:15 PM GMT (Updated: 3 Nov 2022 7:15 PM GMT)

நாகர்கோவிலில் விஷம் குடித்து பெண் தற்கொலை

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் மேலப்பெருவிளையை சேர்ந்தவர் பத்மலட்சுமி (வயது59). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் பத்மலட்சுமி கடந்த சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று எறும்பு பொடியை கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாந்தி எடுத்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பத்மலட்சுமியின் மகள் தங்கசுபா கொடுத்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுட்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story