விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்கமுத்து. இவரது மனைவி முருகாயி (வயது 50). இவர், கடந்த 2 ஆண்டுகளாகவே மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சம்பவத்தன்று வயலுக்கு சென்று களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story