குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண்விஷம் குடித்து தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண்விஷம் குடித்து தற்கொலை
x

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண்விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு மறவன்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 31). இவரும் கணவருடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story