கோபியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கோபியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஈரோடு
கடத்தூர்
கோபி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் பார்வதி (வயது 56). இவர் மேட்டுவளவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட இவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story