கணவர் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவரது மனைவி சசிகலா (வயது 36) மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலா இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





