தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x

நாட்டறம்பள்ளி அருகே வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் பேசாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

தகராறு

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. திருமணமாகி 13 வருடம் ஆகிறது. பிரியதர்ஷினி (12), கோபிகா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜீவ்காந்தி அவ்வப்போது தனது மனைவியுடன் செல் போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் ராஜீவ்காந்தி வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பரிமளாவிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரிமளா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story