காவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி
x

சுவாமிமலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குளிக்க சென்றனர்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள வளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் அபிராமி(வயது 22).நேற்று இவர் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா(23), கீர்த்திகா(20), ரத்தினம் மகன் பாலா (28), சுபாஷ்சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன்(25), சந்தோஷ்(22) ஆகிய 6 பேருடன் அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

ஆற்றில் மூழ்கினர்

ஆற்றில் அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது அபிராமி மற்றும் மீரா ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் 2 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள்.இதைக்கண்ட பாலா அவர்களை மீட்க முயற்சி செய்தார். அப்போது அவரும் ஆற்றில் மூழ்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் பாலாவை மீட்டு கும்பகோணம் அரசு அஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி மாயமான அபிராமி மற்றும் மீராவை தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆற்றில் இருந்து அபிராமியை போலீசார் பிணமாக மீட்டனர். ஆற்றில் மூழ்கிய மீராவை காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஆற்றில் மூழ்கி பெண் பலியான சம்பவம் சுவாமிமலை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story