பர்கூர் அருகே வனப்பகுதியில் பெண் மர்மசாவு போலீசார் விசாரணை


பர்கூர் அருகே வனப்பகுதியில் பெண் மர்மசாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 July 2023 7:00 PM GMT (Updated: 6 July 2023 6:28 AM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி ஊராட்சி குண்டியால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி அம்பிகா (வயது 40). இவர்களுக்கு நந்தினி, புவனேஸ்வரி, திவ்யா என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் நந்தினி, புவனேஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. திவ்யா அங்கினாயனபள்ளி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நந்தினிக்கு குழந்தை பிறந்து தனது தாய் அம்பிகா வீட்டில் இருந்து வந்தார். புவனேஸ்வரி தனது வீட்டு அருகே உள்ளவரை திருமணம் செய்து கொண்டதால் அவரும் தனது தாய் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அம்பிகா சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று காலை பூமலை வனப்பகுதியில் அம்பிகா இறந்து கிடந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மர்மசாவு என வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்பிகா சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story