கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி


கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி
x

ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி ஜோதி (வயது 35). அதே பகுதி சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி குமாரி (39) இவர்கள் இருவரும் கட்டிட தொழில் வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று மற்றொரு கட்டிட தொழிலாளி ராமகிருஷ்ணன் (வயது 19) என்பவரது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக வாணியம்பாடி நோக்கி சென்றனர்.

ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் பின்னால் மோதியது.

இதில் ஜோதியின் தலை மீது கன்டெய்னர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குமாரி, ராமகிருஷ்ணர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த குமாரி, ராமகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story