லாாி மோதி பெண் சாவுகணவர், மகள் படுகாயம்


லாாி மோதி பெண் சாவுகணவர், மகள் படுகாயம்
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:45 PM GMT)

லாாி மோதி பெண் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் கிராமம் ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வீரமணி (வயது 33). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மதி(30). மகள் இனிகா(4).

வீரமணி நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளுடன், வீரபயங்கரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அய்யனார் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சின்னசேலம் அடுத்த வீரபயங்கரம் அருகே சென்ற போது, பின்னால் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயடைந்த மதி சம்பவ இடத்லாதிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த வீரமணி, இனிகா ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெரியகொசப்பள்ளம் யாதவர் தெருவை சேர்ந்த கருப்பசாமியை (61) கைது செய்தார்.


Next Story