ரெயிலில் அடிபட்டு பெண் சாவு


ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
x
தினத்தந்தி 15 Jun 2023 6:20 PM GMT (Updated: 16 Jun 2023 5:59 AM GMT)

ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே மணவாளங்கரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 43). இவர்கள் மணவாளங்கரை ரெயில்வே கேட் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை புவனேஸ்வரி கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story