சின்னசேலம் அருகேமரத்தில் கார் மோதி பெண் சாவுகணவர் உள்பட 4 பேர் படுகாயம்


சின்னசேலம் அருகேமரத்தில் கார் மோதி பெண் சாவுகணவர் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே மரத்தில் கார் மோதி பெண் உயிரிழந்தார். மேலும் அவரது கணவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தியூர் வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆறுமுகம் (வயது 52). இவர் சேலம் மெய்யனூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆறுமுகம், அவரது மனைவி கோமதி மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் காரில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நந்திமங்கலத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர்.

பின்னர் அங்கிருந்து காரில் சேலத்துக்கு புறப்பட்டனர். காரை பனமரத்துப்பட்டி அடிக்கரை கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் ஓட்டிச்சென்றார்.

மரத்தில் கார் மோதியது

அப்போது, சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரை விக்னேஷ் முந்தி செல்ல முயன்றார். அதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆறுமுகம், விக்னேஷ், வினோதினி, நாராயணசாமி ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கீழ்க்குப்பம் போலீசார், விபத்துக்கு காரணமான காரை ஓட்டிய டிரைவர் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story