மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி


மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
x

மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள தாழையூத்து ஸ்ரீநகரை சேர்ந்தவர் பெரியநாயகம். இவருடைய மனைவி சிவானந்தம் (வயது 68). இவர் நேற்று முன்தினம் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் உறவினர் பாலசுந்தரம் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மேலதாழையூத்து பகுதியில் உள்ள வேகத்தடையில் மொபட் ஏறி, இறங்கிய போது சிவானந்தம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சிவானந்தம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story