மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

தேவர்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார்.

திருநெல்வேலி

தேவர்குளம் அருகே மூவிருந்தாளி ஊரைச் சேர்ந்தவர் குல்லாப்பாண்டியன் (வயது 62) என்ற பெரியபாண்டியன். இவருடைய மனைவி சண்முகத்தாய் (60). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகத்தாய் தனது மகன் செல்வம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன் மீரான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story