விழுப்புரத்தில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


விழுப்புரத்தில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிாிழந்தாா்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் உதுமான்அலி மனைவி ஷகிலா பானு (வயது 36). சம்பவத்தன்று இவர் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் ஒரு ஸ்கூட்டரில் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலை அருகில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சாலையை கடக்க முயன்றபோது நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஷகிலாபானு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story