கழிவறையில் தவறி விழுந்த பெண் சாவு


கழிவறையில் தவறி விழுந்த பெண் சாவு
x

கழிவறையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்

மயிலாடுதுறை

கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டையை சேர்ந்தவர் தில்சாத்பேகம் (வயது 38). இவர், இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தில்சாத்பேகம் நண்பர் ஒருவருடன் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற தில்சாத்பேகம் அங்கு தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரது தாய் மும்தாஜ்பேகம் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story