தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி
x

ஆற்காடு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலியானார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த தாழனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 39). இவருக்கு கண்பார்வை சற்று குறைவு எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story