பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x

பஸ் சக்கரத்தில் சிக்கி, கணவன் கண் முன் பெண் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்துார் அருகே உள்ள சாலை நகர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவர், நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் தனது மனைவி அம்பிகாவுடன் (வயது 35) திருப்பத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திருப்பத்துார் சுடுகாட்டின் அருகே வந்தபோது, திருப்பத்துாரில் இருந்து கொத்துார் நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி விழுந்த அம்பிகா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் கணவன் கண் முன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்துார் டவுன் போலீசார், விரைந்து சென்று விபத்தில் இறந்த அம்பிகாவின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story