தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் சாவு


தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் சாவு
x

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார். குழந்தையையும் அவர் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர்

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார். குழந்தையையும் அவர் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனக்கு தானே பிரசவம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் வசந்தி(வயது38). இவருடைய கணவர் செந்தில்(45). கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், 6-வதாக வசந்தி கர்ப்பமானாா். இதைத்தொடர்ந்து அவருக்கு பிரசவ நாள் நெருங்கியது. நேற்றுமுன்தினம் வசந்திக்கு பிரசவ வலி அதிகமானது.அப்போது அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அப்போது வசந்திக்கு 6-வதாக ஆண் குழந்தை பிறந்தது.

பரிதாப சாவு

ஏற்கனவே தனக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் 6-வதாக பிறந்த குழந்தையை வளா்க்க பொருளாதார வசதி இல்லாததால் புதிதாக பிறந்த குழந்தையை கொலை செய்ய வசந்தி முடிவு செய்தார். இதன்படி அவர் குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தாா். பின்னர் அவர் குழந்தையின் உடலை ஒரு பெயிண்ட் வாளியில் வைத்து மூடி வைத்தார்.இந்த நேரத்தில் வசந்திக்கு திடீரென அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இந்தநிலையில் வசந்தியின் குடும்பத்தினர் அவரது உடலை ஆஸ்பத்திரியில் இருந்த யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.இதன்பேரில் போலீசார் வசந்தியின் வீட்டுக்கு விரைந்து சென்று வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தியின் கணவர் செந்திலை அழைத்துச்சென்று போலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story