சக்கரத்தில் சேலை சிக்கி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி


சக்கரத்தில் சேலை சிக்கி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி
x

சக்கரத்தில் சேலை சிக்கி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலியானார்.

வேலூர்

அணைக்கட்டு தாலுகா ரெட்டியூர் அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மனைவி ருக்மணி (வயது 35). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றனர். ருக்மணி மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார். ரெண்டேரிகோடியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ருக்மணியின் சேலை எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிளின் பின்சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது ருக்மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கணவரின் கண்முன்னே பலியானார்.

இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story