மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம்  தாக்கி பெண் சாவு
x

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த பஞ்சநதிக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையன். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார் இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 57). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் ஜெயலட்சுமி அவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகையில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக நடந்து சென்றார். செல்லும் வழியில் மழை பெய்ந்து ஈரத்தன்மையுடன் இருந்த நிலையில் நிலை தடுமாறி எர்த் கம்பியின் மீது விழுந்த அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஜெயலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story