பாம்பு கடித்து பெண் சாவு


பாம்பு கடித்து பெண் சாவு
x

பாம்பு கடித்து பெண் சாவு இறந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி

ஆலங்குடி அருகே தொண்டைமான்விடுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி சாந்தி (வயது 50). இவர் நேற்று முன்தினம் தொண்டைமான்விடுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது காலில் கடித்தது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story