வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை


வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை
x

வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபட்டாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி விமலா(வயது 35). இவர் கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விமலா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story