மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 37). இவர் தனது அக்காள் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை பொருட்கள் வாங்குவதற்காக தனது மனைவி ஜெயலட்சுமியை (35) மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு தோகைமலைக்கு சென்றார். பின்னர் அங்கு சீர்வரிசை பொருட்களை வாங்கி கொண்டு 2 பேரும் வந்து கொண்டிருந்தார். கொத்தமல்லி மேடு என்ற இடத்தில் வந்தபோது, பலத்த காற்று வீசியது. அப்போது சீர்வரிசை பொருட்கள் கீழே விழும் நிலையில் இருந்ததால் அதனை பிடிப்பதற்காக ஜெயலெட்சுமி கையை விட்டதில் தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீேழ விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முனியாண்டி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story