மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி
கோவை
கோவை கணேசபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சாந்தி(வயது 49). இவர் நேற்று முன்தினம் குடிநீர் பிடிப்பதற்காக வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து படுகாயம் அடைந்து கீழே விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





