கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x

பழனி அருகே, மொபட் மீது கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வடக்கு ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 44). அவருடைய மனைவி கவிதா (42). நேற்று இவர்கள் 2 பேரும், பழனி அருகே உள்ள கணக்கன்பட்டிக்கு மொபட்டில் வந்தனர். சுந்தரராஜன் ெமாபட்டை ஓட்டினார். கவிதா பின்னால் அமர்ந்திருந்தார்.

பொள்ளாச்சி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பழனி அருகே வேதாத்திரி நகர் என்னுமிடத்தில் மொபட் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுந்தரராஜன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுந்தரராஜனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கவிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story